றிசாத் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி

 றிசாத் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (17) சனிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென நோய் வாய்ப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச் சென்ற நிலையில் வைத்தியர்களின் அறிவுறுத்தலுக்கமைய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.