பஸ் - ரயில் மோதுண்டு விபத்து; 9 வயது சிறுவன் பலி

பஸ் - ரயில் மோதுண்டு விபத்து; 9 வயது சிறுவன் பலி

மன்னார், தலை மன்னார் பகுதியில் பஸ்ஸொன்றுடன் ரயில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் 9 வயது பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் தலை மன்னார் மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ்ஸில் 30 பேர் பயணித்துள்ளனர். இதில் சுமார் 20 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பஸ்ஸினை தற்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.