அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளராக றினோஸா சத்தியப்பிரமாணம்

அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளராக றினோஸா சத்தியப்பிரமாணம்

எம். ஜௌஸான்

அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளராக ஏ.பீ.பாத்திமா றினோஸா, கல்முனை மாவட்ட நீதிபதி பயாஸ் ரஸாக் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை (25) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சம்மாந்துறை அல் - அர்சத் மகா வித்தியாலயத்தின்  ஆங்கிலப ;பாட ஆசிரியையான இவர், நீதி அமைச்சினால் நடத்தப்பட்ட பரீட்சை ஊடாகவே அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது ஆசிரியர் சேவையை மூதூர் உமர் பாறூக் வித்தியாலயத்திலும், வரிப்பத்தான்சேனை லீடர் ஜுனியர் பாடசாலையிலும் மேற்கொண்டுள்ளார்.

இவர் இளமாணிப் பட்டத்தினை ஆங்கில மொழி மூலமும், பட்டப்பின் கல்வியினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், மேலும் மனித உரிமைகள் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மற்றும் ஆங்கிலத்தில் தேசிய சான்றிதழினையும் பெற்றதுடன் தனது உயர் தரத்தினை சம்மாந்துறை தேசிய பாடசாலையிலும் கற்றுள்ளார்.