கல்முனை மாநகர சபை உறுப்பினராக சிபான் நியமனம்

கல்முனை மாநகர சபை உறுப்பினராக சிபான் நியமனம்

கல்முனை மாநகர சபை உறுப்பினராக மருதமுனையினைச் சேர்ந்த பீ.எம். சிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கல்முனை மாநகர சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் திலிண விக்கிரமரத்ன கடந்த ஜுலை 03ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினராக செயற்பட்ட அலியார் நெய்னா முகம்மது என்பவர் அண்மையில் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியினை இராஜினாமாச் செய்திருந்தார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பீ.எம். சிபானை நியமிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சிபாரிசு செய்திருந்தார்.

இதற்மையவே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.