ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளராக ஹிருணிகா நியமனம்

ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளராக ஹிருணிகா நியமனம்

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர, ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஐக்கிய மக்கள் சக்த்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை இன்று (28) வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும் ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.