ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கை வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்

ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கை  வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்

ஐக்கிய இராச்சியத்தில் நிலவும் மாற்றமடைந்த புதிய கொவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக பயணத் தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்பட்டுஇ ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதலின் கீழ் ஐக்கிய இராச்சியத்திலிருந்தான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது.