பிரதமர் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் பயணம்

பிரதமர் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் பயணம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் செல்லவுள்ளார்.

பங்களாதேஷின் 50ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்குபற்றுவதற்காகவே அந்நாட்டு பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்றே பிரதமர் அங்கு செல்கிறார்.

எனினும் 20ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். கடந்த ஓகஸட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை அடுத்து பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.