கடலில் மூழ்கி மாணவன் மரணம்

கடலில் மூழ்கி மாணவன் மரணம்

-நூருள் ஹுதா உமர்-

கல்முனை பிரதேச கடலில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவனான நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று செவ்வாய்க்கிழமை மாலை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர (உயர்தர) தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மரணித்தவரின் சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.