ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரிப்பு

ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரிப்பு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அபி ஜனபலக பக்ஷய எனும் கட்சி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஞானசார தேரர் இன்று (19) வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும் சத்திய கடதாசியில் தவறுகள் காணப்படுவதாக தெரிவித்து குருநாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரர் ஆகியோர் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக உருவாக்கிய கூட்டணியே இதுவாகும்.

இந்த கட்சியினால் முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.