8 இலங்கையர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற UAE தூதரகம் ஏற்பாடு

8 இலங்கையர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற UAE தூதரகம் ஏற்பாடு

எட்டு இலங்கையர்கள் இந்த வருடத்திற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான அனுசரனையினை எமிரேட்ஸில் உள்ள ஸாயிட் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனம் வழங்கியுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான ஏற்பாட்டினை கடந்த பல வருடங்களாக கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மேற்கொண்டு வருகின்றது.

எனினும், கொவிட் - 19 காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்து குறித்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.