கென்யாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர்களின் ஒரு மாத சம்பளம் கொவிட் நிதியத்திற்கு நன்கொடை

கென்யாவில் உள்ள இலங்கை  உயர் ஸ்தானிகராலய ஊழியர்களின்  ஒரு மாத சம்பளம் கொவிட்  நிதியத்திற்கு நன்கொடை

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 நிலைமை மற்றும் நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீவிரமான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் கொவிட்-19 நிதியத்திற்கு தமது ஆகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்

கொவிட்-19 நிதியத்திற்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்மொழிவைப் பின்பற்றி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையிலான கொவிட்-19 பிரதிபலிப்புக்களில் அரசாங்கத்தின் கைகளை வலுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.