திருகோணமலை ஊடக இல்லம் திறப்பு

திருகோணமலை ஊடக இல்லம் திறப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்  திருகோணமலை ஊடக இல்லம் இன்று (06) சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திருகோணமலை நகரில் திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஊடக சங்கத்தின் தலைவர் மங்களநாத் லியனாராச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டி கோராள கலந்துகொண்டு ஊடக இல்லத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு டிசேர்ட் வழங்கி வைக்கப்பட்டன.  மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உபரத்ன கிமி தேரர் இதற்கான அனுசரனையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து இன ஊடகவியலாளர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.