யாழில் தகவலறியும் சர்வதேச தின நிகழ்வுகள்

யாழில் தகவலறியும் சர்வதேச தின நிகழ்வுகள்

தகவல்களுக்கான உலகளாவிய அணுகலுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (28) புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் (29) வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் இலங்கையின் தகவலறியும்  உரிமைக்கான ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணத்தில் தொடர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, 28ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழுவினால் தகவலுக்கான உரிமைச் சட்டம் தொடர்பில் காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 2.15 மணி வரை கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இதேவேளை, 29ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வட மாகாணம் தொடர்பான பத்திரிகையாளருடன் கலந்துரையாடலொன்றும் நடைபெறவுள்ளது.