ஓகஸ்ட் 1 இல் நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரை

ஓகஸ்ட் 1 இல் நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரை

நீலன் திருச்செல்வம் வருடாந்த நினைவுப் பேருரை எதிர்வரும்  ஓகஸ்ட் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

21ஆவது தடவையாக இந்த வருடம் நடைபெறும் இந்த நிகழ்வு இணைய வழி மூலம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் நிபுணத்துவதம் பெற்ற இஸ்ரேலிய மனித உரிமை சட்டத்தரணி மிச்சேல் ஸபர்ட், "Cause Litigation in the Court of the Abuser" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

இந்த நிகழ்வினை https://www.facebook.com/neelantiruchelvamtrust எனும் பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடியாக பார்வையிட முடியும்.

அத்துடன் இந்த நினைவுப் பேருரையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் https://zoom.us/meeting/register/tJEqcumgqDkvHNRegu2AQrXidODvg0XAYfSt எனும் இணையத்தளத்தில் பதிவுசெய்துகொள்ள முடியும்.