வெலிகட சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை

வெலிகட சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை

வெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து மீள அறிவிக்கும் வரையில் சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிகட சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பரிசோதனைகளுக்கு கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.