இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் லொஹான் ரத்வத்தே

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் லொஹான் ரத்வத்தே

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

தனது இராஜினாமா பற்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்றைய தினம் (15) அவர் அறிவித்த நிலையில், ஜனாதிபதியும் அவருடைய இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.