திருமலை வைத்தியசாலையின் வைத்தியருக்கு கொரோனா தொற்று

திருமலை வைத்தியசாலையின் வைத்தியருக்கு கொரோனா தொற்று

ரிஸாதா பர்வின்

திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விடுமுறைக்கு சென்று வைத்தியசாலைக்கு திரும்பிய வைத்தியருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

குறித்த வைத்தியருடன் தங்கியிருந்த மற்றுமொரு வைத்தியருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.