வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு சீனாவினால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு சீனாவினால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான மருந்துவ உபகரணங்கள் சீனாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில் கொழும்பிலுள்ள சீனா தூதுவராலயத்தினால் 20 மில்லியன் ரூபா பெறுமதியான எட்டு சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான பரிசோதனைக்கு அத்தியாவசியமான சிறு நீரக டயலிசிஸ்(Kidney Dialysis Machine) உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (22) புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கான சீன தூதுவர் கீ.சென்ஹோங், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கடந்த வாரம் சீது தூதுவர் வட மாகாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தினை அடுத்தே இந்த மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.