புத்தளத்தில் இணைந்து போட்டியிடுவது குறித்து மு.கா - ம.கா ஆராய்வு
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் தொகுதிக்கு பாராளுமன்ற பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பில் முதற்கட்ட கலந்துரையாடல் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் புத்தளம் நகர சபை தலைவருமான கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் புத்தளம் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா உட்பட இரு கட்சிகளினதும் புத்தள மாவட்ட உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்த கூட்டமைப்புடன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களையும் இணைத்த கூட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையொன்றும் புத்தளம் மாவட்ட ஐ.தே. கட்சி அமைப்பாளர் ஏ.ஓ. அலிகானின் இல்லத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)