கிழக்கில் 10 தவிசாளர்களை இடைநிறுத்திய வர்த்தமானி அறிவித்தல் இரத்து

கிழக்கில் 10 தவிசாளர்களை இடைநிறுத்திய வர்த்தமானி அறிவித்தல் இரத்து

கிழக்கு மாகாணத்திலுள்ள 10 உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களை இடைநிறுத்தி அவர்களுக்கான அதிகாரங்களை உப தவிசாளர்களுக்கு வழங்கிய 08.01.2021 ஆம் திகதியே 2209/73 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்துள்ளதாக மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரினால் 27.01.2021ஆம் திகதி வெளியிடப்பட்ட 2212/21 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரதி தவிசாளர்கள், தவிசாளர்களின் கடமைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் 27.01.2021ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.