பள்ளிவாசல்களில் 100 பேர் தொழுவதற்கு அனுமதி

பள்ளிவாசல்களில் 100 பேர் தொழுவதற்கு அனுமதி

பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 100 பேர் தொழுவதற்கு அனுமதியினை சுகாதார அமைச்சு இன்று (13) செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது.

இதுவரை காலமும் பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 50 பேர் மாத்திரமே தொழுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறன நிலையில் புனித ரமழானை காலத்தில் பள்ளிவாசல்கள் கடைப்பிடிக்க வேண்டிய 30 வழிமுறைகளை கொண்ட விசேட சுற்றுநிரூபத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

இந்த சுற்றுநிரூத்திலேயே குறித்த அதிகாரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் 18 வயதுக்கு குறைந்தவர்களை பள்ளிவாசல்களின் அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.