நுவரெலியாவில் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா

நுவரெலியாவில் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா

2021ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று அண்மையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரான எஸ்.பி. திசநாயாக்க தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது 2021ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவினை ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வினை முன்னிட்டு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதத்க்கது.