சட்டவிரோதமாக இந்திய சென்ற 65 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமாக இந்திய சென்ற 65 இலங்கையர்கள் கைது

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் செல்லும் நோக்கில்  சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்ற 65 இலங்கையர்கள் அந்நாட்டின் இரண்டு நகரங்களில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீமங்களுரில் வைத்து 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்தின் தூத்துக்குடி வரையில் அழைத்துச் செல்லப்பட்டுஇ அங்கிருந்து பெங்களூர் வழியாக மங்களுருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதானவர்களிடம் இலங்கையில் செயற்படுகின்ற இடைத்தரகர்கள் சுமார் 500,000 இந்திய ரூபாய் வரையில் கட்டணமாகப் பெற்றிருப்பதாகஇ மங்களுர் காவல்துறை ஆணையாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேற்றும் இவ்வாறு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் தமிழகம் சென்று தங்கி இருந்து 27 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர்களில் 24 பேர் ஆண்கள் என்பதோடு ஓர் குழந்தையும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கொவிட் கடுமையாக பரவுகின்ற சூழ்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.