தேர்தலுக்குப் பின்னரும் வெறுப்புப் பேச்சும் வன்முறையும் அதிகரிக்கும் அபாயம்: CMEV

தேர்தலுக்குப் பின்னரும் வெறுப்புப் பேச்சும் வன்முறையும் அதிகரிக்கும் அபாயம்: CMEV

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு ஓரிரு நாட்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் போலிச்­ செய்­திகள் மற்றும் வெறுப்புப் பேச்சு என்­பன முன்­னெப்­போ­து­மில்­லாதவாறு அதி­க­ரித்­துள்ளன. இந்­நி­லையில் தேர்தல் காலங்­களில்பரவும் போலிச்­செய்­திகள் மற்றும் வெறுப்­புப்­பேச்சு தொடர்­பாக தேர்தல் வன்­மு­றைகளை கண்­கா­ணிப்­பதற்­கான நிலை­யத்தின் (சி.எம்.ஈ.வி) தேசிய ஒருங்­கி­ணைப்­பாளர் மஞ்­சுள கஜ­நா­யக்க விடி­வெள்­ளிக்கு வழங்கிய நேர்­காணல் வரு­மாறு :

நேர்காணல்: எம்.ஏ.எம். அஹ்ஸன்

Q: வெறுப்புப்­பேச்சு என்­பது எல்லா தேர்­தல்­க­ளிலும் பிர­தான பிரசார ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டுகிறது. இதை தடுப்­ப­தற்­கான வழிமு­றைகள் எவை?

இந்த உல­கத்தின் கடைசி மனிதன் வாழும் வரை போலிச்­ செய்தி என்ற
ஒன்று இருந்து கொண்­டுதான் இருக்கும். எங்­க­ளாலும் இது தொடர்­பாக ஆர்வம்
காட்டுப­வர்­க­ளாலும் இந்த விட­யத்தை கட்டுப்­ப­டுத்த முடியுமே தவிர இல்­லாமல்
செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடை­யாது.

மிக மிக நவீன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சட்­டங்­களை பின்­பற்றிதான் நாங்கள் தேர்தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்கை­களில் ஈடுபடுகின்றோம். இதிலிருந்து சட்­டத்தால் மாத்திரம் அனைத்­தையும் கட்டுப்­ப­டுத்தி விட முடி­யாது என்­பது புலனா­கின்­றது. எனவே சமயத் தலை­வர்கள் உட்­பட சமூக ஆர்­வ­லர்கள் இணைந்து இவற்றின் தீமையைப் பற்றி மக்­களுக்கு எடுத்து­ரைக்க வேண்டும்.

Q: போலிச்­ செய்தி­க­ளுக்கும் வெறுப்புப் ­பேச்சுக்கும் எதிராக சி.எம்.ஈ.வி.யினால் மேற்­கொள்ள முடியுமான நட­வடிக்­கைகள் என்ன?

போலிச்­செய்­திகள் மற்றும் வெறுப்புப் பேச்­சுக்கள் வெளிப்­ப­டும்­போது தேர்தல்
ஆணைக்­குழுவுடன் இணைந்து சி.எம்.ஈ.வி செய்ய முடியு­மான பிரதான விட­யங்கள் இருக்­கின்­றன.

போலிச் செய்தி மற்றும் வெறுப்புப் பேச்சு பரவும்­போது முத­லா­வ­தாக பேஸ்புக் போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு விட­யத்தை உடனடி­யாக தெரி­யப்­ப­டுத்தி அதனை தடுப்­ப­தற்­கான முழு ஒத்து­ழைப்பை சி.எம்.ஈ.வி வழங்கும்.

அடுத்­த­தாக இவற்றை தடுத்து நிறுத்து­வ­தற்கு பொலிஸாரின் சேவையையும் எங்­களால் பெற்றுக்­கொள்ள முடியும். இதனால் துரித நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு சி.எம்.ஈ.வி எப்­போதும் இந்த விட­யங்கள் மீது கவனம் செலுத்­துகின்­றது.

சர்­வ­தேச ரீதி­யாக பாரிய சவால்கள் ஏற்­ப­டும்­போது இன்­டர் போலின் உதவியை பெற்றுக்­கொள்­வதற்­கான பொறிமு­றை­களும் எங்கள் வசம் உள்­ளன. ஆனாலும் அந்­தளவு பிரச்­சி­னைகள் இம்முறை ஏற்­ப­டவில்லை.

சமூக வலைத்­த­ளங்­களில் பரவும் வெறுப்­புப்­பேச்­சுக்கள் பெரும்­பாலும் வெளி­நாட்டு முக­வ­ரி­களில் இருந்து நவீன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட மென்­பொ­ருள்கள் ஊடாக பகிரப்­ப­டுகின்­றன.

ஆனாலும் இவற்றை முடக்குவ­தற்கும் இதற்கு எதிராக நட­வ­டிக்கை எடுப்­பதற்கும் நவீன தொழில்நுட்ப வச­திகள் எங்­க­ளிடம் இருக்­கின்­றன. அத்துடன் சைபர் தாக்­குதல், புதிய ஊட­கங்கள் பற்­றிய விட­யங்கள் மீதும் சி.எம்.ஈ.வி அதிக கரி­சனை காட்டுகிறது.

Q: பெண் வேட்­பா­ளர்­க­ளுக்கு எதிரான அவ­தூறுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

உண்­மையில் தேர்­தலின் போது யாரையும் ஆண் பெண் என்ற பிரிவி­னையில் சி.எம்.ஈ.வி பார்ப்­ப­தில்லை. எல்­லோ­ரையும் சம அளவில்தான் பார்த்­துக்­கொள்கின்றோம்.

ஒரு சில காரணங்­களுக்­காக பெண்­க­ளுக்கு எதிரான வன்­மு­றை­களை கண்­கா­ணிப்­பதில் விசேட கவனம் செலுத்துகின்றோம். பெண்­களுக்கு எதிரான வெறுப்­புப்­ பேச்­சுகளில் சமூ­கத்தில் வேரூன்றிப்­போ­யுள்ள சமூக எண்­ணக்­க­ருக்கள் மற்றும் சமய நிலைப்பா­டுகள் காணப்­ப­டுகின்­றன.

இதற்கு தேர்தல் காலமோ பெண் வேட்­பா­ளர்­களோ விதிவி­லக்கு கிடை­யாது. காலங்­கா­ல­மாக பெண்­க­ளுக்கு எதிராக வெறுப்­புப்­ பேச்சுக்கள் தூண்­டப்­ப­டுகின்­றன. பெண்­களை மதிக்கும் ஒரு சமூ­கத்தை கட்டி­யெ­ழுப்பாத வரையில் தேர்தல் காலத்தில் பெண்
க­ளுக்கு எதிரான வெறுப்­புப்­ பேச்­சுக்­களை இல்­லாமல் செய்ய முடி­யாது.

Q: தேர்­த­லுக்கு பின்னர் வெறுப்புப் ­பேச்சு அதி­க­ரிக்க வாய்ப்பு இருக்கிறதா?

தேர்­த­லுக்குப் பின்னர் வெறுப்­புப் பேச்­சுக்கள் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்புக்கள் அதி­க­மாக இருக்­கின்­றன. எங்­க­ளுக்குத் தெரியும் தோல்வி என்­பது ஏற்றுக்­கொள்ள சிர­ம­மான ஒன்று.

பெறு­பே­று­க­ளுக்குப் பின்னர் வெற்­றி­யா­ளரின் பக்­கம்தான் அனைத்து மக்­களும் இருப்­பார்கள். ஒரு­வரின் அல்­லது ஒரு கட்சியின் வெற்றியை கொண்­டாட அனை­வரும் ஒன்று சேரும்­போது குறித்த கட்சிக்கு வாக்­களித்­த­வர்கள் யார் வாக்­க­ளிக்­கா­த­வர்கள் யார் என்­பதை எங்­களால் அடை­யாளம் காண முடி­யாது.

இந்த நேரத்தில் சமூ­கத்துக்கு ஒவ்வாத நபர்கள் நல்ல தண்­ணீருள்ள குட்­டையை குழப்பி விடு­வ­தைப்­போல இதையும் குழப்பி அதில் ஆனந்தம் காணத்தான் முனை­வார்கள்.

இந்த சந்­தர்ப்பத்தில் அரசியல், தர்மம், நீதி, நியாயம், சமயம் என சகல விட­யங்­களும் மறந்து போகும் நிலைமை ஒரு சில கட்சி ஆதர­வா­ளர்­க­ளுக்கு ஏற்­ப­டும்­போது வெறுப்புப் ­பேச்சு அதி­க­ரிக்கும்.

தேர்­த­லுக்குப் பின்னர் ஏற்­ப­டக்­கூடிய வெறுப்­புப் ­பேச்சுக்கள் தொடர்­பாக ஆராய்ந்து அதனை கட்டுப்­ப­டுத்து­வ­தற்­கான திட்­டங்கள் அடங்­கிய கோவையை தேர்தல் ஆணைக்குழு தற்­போது வெளியிட்டுள்­ளது.

Q: வெறுப்புப்­பேச்சு மற்றும் போலிச் செய்தி­களை வெளியிடும் நபர்­க­ளுக்கு நீங்கள் தெரிவிக்கும் அறிவுரை என்ன?

தேர்தல் காலங்­களில் ஒரு நபரை ஒரு குழுவை அல்­லது ஒரு கட்சியை உற்­சாகப்­ப­டுத்து­வ­தற்­காக அல்­லது இன்­னொரு கட்சியை இழிவு படுத்து­வ­தற்­காக வெறுப்புப்­ பேச்­சுக்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டுகின்­றன.

இந்த சந்­தர்ப்­பத்தில் பொய்­யான விட­யங்கள் பரப்­பப்­படும் நிலையும் ஒரு சில சந்தர்ப்பங்­களில் பொய்கள் அம்­ப­லமாகும் நிலையும் காணப்­ப­டுகின்­றது. என்­ன­வாக இருந்­தாலும் வெறுப்­புப் ­பேச்சை ஆதரிக்க முடி­யாது.

ஒவ்­வொரு வெறுப்புப்­ பேச்சின் பின்­ன­ணியிலும் இனம், மதம், சமயம் கட்சி பால் என மனிதர்கள் பிரிந்திருக்கும் நிலை இதனைப் பரப்­பு­வோர்­களுக்கு சாதகமாக உள்ளது.

வெறுப்புப் பேச்சினை பரப்புவோர்களின் முதல் நோக்கம் பாதிக்கப்படும் நபருக்கு எதிராக மக்களை துண்டுவதாகும். வெறுப்புப் பேச்சுக்கு எதிராக செயற்படுபவர்களே நாட்டின் நல்ல குடிமக்களாவர்.

நாட்டை துண்டு போடவோ சர்வதேச பார்வையில் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தவோ நாட்டின் நல்ல குடிமகன்கள் முன்வரமாட்டார்கள். எனவே ஒரு
விடயத்தை சமூகத்துக்கு சொல்லுவதன் நோக்கத்தை ஆராய்ந்து அதன் பின்னர் சொல்லுங்கள்.

உறுதிப்படுத்தப்படாத, ஆதாரம் இல்லாத செய்திகளை பகிரவோ அல்லது ஆதரிக்கவோ வேண்டாம். இதை செய்தால் வன்முறை யுத்தம் என பல
விளைவுகளை இலங்கை சந்திக்கும்.