டொலர் பற்றாக்குறையால் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை: SLCPI

டொலர் பற்றாக்குறையால் அத்தியாவசிய  மருந்துகளுக்கு பற்றாக்குறை: SLCPI

இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு குறித்த தனது கருத்துக்களை வெளியிடும் வகையில் ஊடகவியலாளர்சந்திப்பொன்றை அண்மையில் ஏற்பாடு செய்தது.

SLCPI அதிகாரிகள் அத்தியாவசிய மருந்துகளில் தற்போதைய பற்றாக்குறையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் அத்தியாவசிய மருந்துகள் உட்பட விநியோகங்கள்
நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்வது குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் இதன்போது கருத்துக்களை வெளியிட்டனர்.

விநியோகத்தின் போது ஏற்படும் சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலைகள் போன்ற உலகளாவிய பிரச்சினைகளால் மருந்துத் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகளை தொழில்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

நம்பத்தகாத விலை விதிமுறைகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு (National Medicines Regulatory Authority - NMRA) நிர்ணயித்துள்ள உண்மைக்கு மாறான விலைக் கட்டுப்பாடுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தைத் தற்போது தக்கவைக்க முடியவில்லை என்று மருந்துத் துறை குறிப்பிட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் அக்டோபர் 2016 முதல் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமைக்கு காரணம் வெளிப்படையான மற்றும் செயல்படக்கூடிய முறையான விலை நிர்ணய வழிமுறை இல்லாத காரணத்தினால் ஆகும்.

"ஒரு நிலையான விலை நிர்ணயம் பொறிமுறையானது பரிமாற்ற வீதம், எரிபொருள் செலவுகள், வட்டி மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய உள்ளீட்டு செலவுகளை சரிசெய்ய உதவும். தொழில்துறை மற்றும் நோயாளி ஆகிய இரண்டிற்கும் நிலையான விலை நிர்ணய பொறிமுறையை நிறுவுமாறு நீதிமன்றத்தால் NMRAக்கு கோரப்பட்டுள்ளது. இது இன்னும் அமுல்படுத்தப்படவில்லை” என SLCPI சுட்டிக்காட்டியது.

1) சந்தையில் கணிசமான காலத்திற்குக் கிடைக்கும் தயாரிப்புகளின் மீள்-பதிவு மற்றும் 2) புதிய தயாரிப்புப் பதிவுகளை வழங்குவதில் NMRAஇல் தேவையற்ற தாமதம் இருப்பதாக தொழில்துறை மேலும் குறிப்பிட்டது.

ஒழுங்குமுறைக் கட்டணங்கள் சராசரியாக 11 மடங்கு அதிகரித்துள்ளதால், சீரான சேவை எதிர்பார்த்ததை விடக் குறைவாக உள்ளது. "தயாரிப்பு பதிவு ஒப்புதல்கள் மற்றும் இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்கான ஆவணங்களை செயலாக்குவதில் கடுமையான தாமதம் உள்ளது" என SLCPI தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு

"85% மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன, மேலும் அனைத்து செயலில் உள்ள பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திக்கான துணைப் பொருட்களுடன், இந்த இறக்குமதிகள் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்காக செலுத்தப்படுகின்றன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன.

இதன் விளைவாக, விநியோகஸ்தர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை” என SLCPI வலியுறுத்தியது.  மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக நிறுவப்பட்ட கடனுக்கான கடிதங்களை (Letters of Credit - L/Cs) மதிப்பளிப்பதில் வங்கிகள் சிரமப்படுவதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

போதுமான டொலர்கள் இருக்கும் வரை வங்கிகள் L/Csகளைத் திறப்பதை தாமதப்படுத்துகின்றன. இதன் விளைவாக, நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப அல்லாமல் டொலர்கள் கிடைப்பதற்கு ஏற்ப ஏற்றுமதி திட்டமிடப்பட்டுள்ளது என்று தொழில்துறை எச்சரித்தது.

"எங்கள் நோயாளிகளின் சுக வாழ்வே எங்கள் முன்னுரிமை. தொற்றுநோய்களின் போது, கடினமான சூழ்நிலைகளில் தொடர்ச்சியான விநியோகங்களை உறுதி செய்வதன் மூலம் இதை நாங்கள் நிரூபித்தோம்.

மருந்துகளுக்கான இலங்கையின் உடனடித் தேவைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்

மேலும் முக்கியமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை நிர்ணயம் மற்றும் பதிவுகளுக்கு எங்கள் NMRA சிவப்பு எல்லையை உடனடியாக அகற்றவது முன்நிபந்தனையாகும்" என SLCPI தெரிவித்துள்ளமை

SLCPI ஆனது உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், தனியார் மருந்துத் துறையில் 80%க்கும் அதிகமான பங்கைக் கொண்ட 60 உறுப்பினர்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. இந்த பங்குதாரர்கள் இலங்கை நோயாளிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள 364 உற்பத்தியாளர்களிடமிருந்து 800 மூலக்கூறுகளை வழங்குகிறார்கள்.