யாழ். பல்கலையின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக பிரகடனம்

யாழ். பல்கலையின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக பிரகடனம்

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், பல்கலைக்கழகமாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜுன் 4ஆம் திகதி கல்வி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வளாகம், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என அழைக்கப்படும். இந்த வர்த்தமானி அறிவித்தல்  எதிர்வரும் ஓகஸ்ட் 01 முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், தொழிநுட்பவியல் கற்கைகள் பீடம் ஆகிய மூன்று பீடங்கள் இந்த பல்கலைக்கழத்தில் செயற்படவுள்ளன.