BBC தமிழ் ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைப்பு

BBC தமிழ் ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைப்பு

BBC தமிழ் ஊடக நிறுவனத்தின்  ஊடகவியலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான யூ.எல்.மப்றூகினை பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு விசாரணைகளுக்காக வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு எதிர்வரும் 8ஆம் திகதி வருகைத் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தினால் ஊடகவியலாளர் மப்றுக்கிற்கு இந்த  அழைப்பு கடிதம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.