SPB அவசர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்

SPB அவசர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்

தென்னிந்தியாவினைச் சேர்ந்த பிரபல தமிழ் பாடகரான எஸ்.பி. பாலசூப்ரமணியம், அவசர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர் வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவரது உடல்நிலை மிக சிக்கலான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில் அவர் மீண்டு வர வேண்டும் என பல்வேறு திரை பிரபலங்களும், பாடகர்களும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசூப்ரமணியம் உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்படுகின்றன. "இது முற்றிலும் பொய்யானது" என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளதுடன் அவர் அவசர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.