ரங்க கலன்சூரியவிற்கு அதியுயர் சர்வதேச ஊடக விருது

ரங்க கலன்சூரியவிற்கு அதியுயர் சர்வதேச ஊடக விருது

சிரேஷ்ட ஊடகவியலாளரான கலாநிதி ரங்க கலன்சூரியவிற்கு அதியுயர் சர்வதேச ஊடக விருது கிடைக்கப் பெற்றுள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து ஊடக சுதந்திரத்திற்கான இந்த விருதினை வழங்குகின்றன.

குறித்த விருதிற்கு இந்த வருடம் வழங்கப்பட்ட 60 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. இதில் முதல் ஐந்து இடங்களில் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியவற்றின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான இவர், தற்போது சர்வதேச ஊடக ஒத்துழைப்பு நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான ஆலோசகராக செயற்படுகின்றார்.

இந்த விருதிற்கு இவர் தெரிவுசெய்யப்பட்டதனை அடுத்து இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டோன் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எம்.சீ.சினோன் டேவிட் ஆகியோர் இவரை இன்று (20) நேரில் சந்தித்து வாழ்த்தினர்.