த ஃபைனான்ஸ் நிறுவன முதலீட்டாளர்களின் பெற்றோர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

த  ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த குடும்பங்களின் பெற்றோர்,  தங்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினை  இன்று (22) செவ்வாய்க்கிழமை சந்தித்து மகஜரொன்றை கையளித்தனர்.

இலங்கை நிதித் துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான தேசிய மன்றமும் இதில் கலந்துகொண்டது.வைப்பாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தான்உறுதியாக இருப்பதாகவும்இ அவர்களுக்காக ஜனநாயக முறையில் போராடுவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்தார்.