கரடியனாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிரமதானம்

கரடியனாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிரமதானம்

தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்படும் கரடியனாறு வைத்தியசாலையில் இன்று சிரமதான நிகழ்வொன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் அதிகமானவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இணைந்தே இன்று இந்த வைத்தியசாலையின் சுற்றுப்புற சூழலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்தனர்.

இதன்  இறுதியில் துப்பரவு செய்யப்பட்ட பிரதேசத்தில் மரம் ஒன்றும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சிரமதானப் பணியில் மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேசன் அங்கத்தவர்களும், காத்தான்குடி சகோதரர்களும் விருப்பத்துடன் கலந்துகொண்டமை சிறந்த முன்னுதாரணமாகும்.