பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பிற்கு இம்ரான் கான் வரவேற்பு

பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பிற்கு இம்ரான் கான் வரவேற்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) புதன்கிழமை பாராளுமன்றத்தில் மேற்கொண்ட அறிவிப்பினை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வரவுள்ள நிலையிலேயே குறித்த அறிவிப்பினை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் இன்றைய அறிவிப்பினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் வரவேற்றிருந்தார்.

இதேவேளை, கொவிட் - 19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

We welcome Sri Lankan PM Mahinda Rajapaksa's assurance given in Sri Lankan Parliament today allowing Muslims to bury those who died from COVID19.

— Imran Khan (@ImranKhanPTI) February 10, 2021