பலவந்த ஜனாஸா எரிப்பினை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பலவந்த ஜனாஸா எரிப்பினை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக தகனம் செய்வதை நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலாத்கார தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பின் ஏற்பாட்டிலான இந்த ஆர்ப்பாட்டம் நாளை (23) செவ்வாய்க்கிழமை பி.ப 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  நாளை பிற்பகல் 4.15 மணியளவில் கொழும்பை வந்தடையவுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்து", "பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்று", "பலவந்த தகனத்தினை நிறுத்து" போன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.