வரட்சி காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

வரட்சி காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

பிரதான நீர்த் தேக்கங்கள் மற்றும் குடிநீர் பெற்றுக்கொள்ளப்படும் நீரேந்து பகுதிகள் வற்றிப் போயுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டது.

இதனால், உயரமான பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக சபை தெரிவித்தது.

இதனால், நீரை குறைவாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பொதுமக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.