ரொலோவின் செயலாளராக ஜனா தெரிவு

ரொலோவின் செயலாளராக ஜனா தெரிவு

ரொலோ என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் ஜனா கருணாகரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (20) முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற செயலாளர் நாயகம் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஜனா தெரிவுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ரொலோவின் அலுவலகத்தில் தனது கடமைகளை அவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த கட்சியின் தலைவராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.