கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல தீர்ப்பு சபாநாயகரிடம் கையளிப்பு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு  சட்டமூல தீர்ப்பு சபாநாயகரிடம் கையளிப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (06) கிடைத்தது.

இதற்கமைய குறித்த தீர்ப்பு எதிர்வரும் 18ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பது தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைக்கப்பெறாமையின் காரணமாக கடந்த 05ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படவிருந்த விவாதத்தை முன்னெடுக்காதிருக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு