கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் ஆளும் தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும்:பைசால் காசிம்

கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் ஆளும் தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும்:பைசால் காசிம்

நூருள் ஹுதா  உமர்

இன்றைய சூழ்நிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் ஆளும்தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், முன்னாள் சுகாதார துறை இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் தெரிவித்தார்.

"எதிர்காலத்தில் எங்களின் சமூகத்தில் இவ்வாறான அரசியல் செய்யும் நிலை இருக்காது என்று நம்புகிறேன். சமூகம் , சமூகம் சார்ந்த சிந்தனை, சமூகத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இளைஞர் சமூகம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமூகத்தின் மிக சவாலான காலமாக எதிர்கால அரசியல் இருக்கும். இதை காப்பாற்ற எதிர்வரும் காலங்களில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து செல்வதே யோக்கியமானது  எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிது இணையதளத்தின்  அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய  அவர்,

"18ஆம் திருத்த சட்டத்தில் ஆதரவு வழங்க வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிர்பந்திக்கப்பட்டார். ஏனென்றால் எங்களின் கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக அவருக்கு அந்த முடிவை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கட்சியை காப்பாற்ற வேண்டும் என்கின்ற நிலையில் நாங்கள் அந்த முடிவை எடுத்தோம். அமரர் தொண்டைமானின் அஞ்சலி நிகழ்வில் எங்களின் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதமர் மஹிந்த அவர்களும் பேசிக்கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம்.

சிறுபான்மை கட்சி என்ற வகையில் ஆளும் கட்சியுடன் ஒத்துபோக வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு பிரச்சினை வருகின்ற போது வெளியில் இருந்து பேசுவதை விட ஆளும் தரப்பில் இருப்பது சௌகரியமான ஒரு விடயம். அதிலும் சில தடைகள் இருக்கிறது இல்லாமல் இல்லை.

என்னை பொறுத்தமட்டில் அவ்வாறான ஒரு நிலை வந்தால் இன்றைய சூழ்நிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் ஆளும்தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும். எதிர்காலத்தில் எங்களின் சமூகத்தில் இவ்வாறான அரசியல் செய்யும் நிலை இருக்காது என்று நம்புகிறேன்.

சமூகம் , சமூகம் சார்ந்த சிந்தனை, சமூகத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இளைஞர் சமூகம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த சமூகத்தின் மிக சவாலான காலமாக எதிர்கால அரசியல் இருக்கும். இதை காப்பாற்ற எதிர்வரும் காலங்களில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து செல்வதே யோக்கியமானது என்று நினைக்கிறேன்" என்றார்.