சுய தனிமைப்படுத்தலிலுள்ள பைசால் எம்.பி

சுய தனிமைப்படுத்தலிலுள்ள பைசால் எம்.பி

நூருல் ஹுதா

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று (26) புதன்கிழமை முதல் பதினான்கு நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயலவரொருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவரை தனது வாகனத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்.

குறிப்பிட்ட சுகயீனமான நபர் கொரோனா ரைவஸ் தொற்றாளராக இனம் காணப்பட்டமையினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.