அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்ட COVID-19 நோயாளி இன்று வீடு திரும்பினார்

 அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்ட COVID-19 நோயாளி இன்று வீடு திரும்பினார்

அக்கரைப்பற்றில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட முதலாவது COVID-19 நோயாளி சிகிச்சையின் பின் இன்று (25) வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.

எனினும், மேலும் இரு வாரங்களுக்கு தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் COVID-19 இற்கு பொறுப்பான வைத்தியர் நாகூர் ஆரிப் தெரிவித்தார்.