ஜனாதிபதி - தமிழ் கூட்டமைப்பு நாளை சந்திப்பு

ஜனாதிபதி - தமிழ் கூட்டமைப்பு நாளை சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு நாளை (16) புதன்கிழமை பி.ப 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன்,  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை முதற் தடவையாக சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ், ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவற்றில் தீர்மானம் ஆகியன நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.