கோப் குழுவின் உறுப்பினராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமனம்

கோப் குழுவின் உறுப்பினராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமனம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த.சில்வா பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) சபையில் அறிவித்தார்.

ரன்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகியதன் காரணமாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.