வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைதியின்மை

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைதியின்மை

மட்டக்களப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று (21) திங்கட்கிழமை இரவு  மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரினால் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துஇ இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து, பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.