கண்டிக்கான இந்தியாவின் உதவி உயர் ஸ்தானிகராக அதிரா நியமனம்

கண்டிக்கான இந்தியாவின் உதவி உயர் ஸ்தானிகராக அதிரா நியமனம்

கண்டிக்கான இந்தியாவின் உதவி உயர் ஸ்தானிகராக டாக்டர் அதிரா எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் உதவி உயர் ஸ்தானிகராக கண்டியில் கடமையாற்றிய ராகேஸ் நடராஜ், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின்  கொன்சியூலர் ஜெனரலாக நேற்று திங்கட்கிழமை (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தற்போது யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் கொன்சியூலராக பணியாற்றும் டாக்டர் அதிரா எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவில் இரண்டாம் நிலை செயலாளராகவும் இவர் குறிப்பிட்ட சில மாதங்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.