குடும்பத்துடன் இணைந்தார் அஹ்னாப்

குடும்பத்துடன் இணைந்தார் அஹ்னாப்

கடந்த 18 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் இன்று (16) வியாழக்கிழமை தனது குடும்பத்துடன் இணைந்துகொண்டார்.

புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் நேற்று (15) புதன்கிழமை இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. எனினும் கொழும்பு நீதவான் நீதிமன்ற வழக்கொன்று காரணமாக இவர் விடுதலை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இன்று அஹ்னாபின் சட்டத்தரணிகளினால் விசேட மனுவொன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.