கணக்காளர் ஹபிப்புல்லா பதவி உயர்வு

கணக்காளர் ஹபிப்புல்லா பதவி உயர்வு

சர்ஜுன் லாபீர்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளரும் பிரபல தேசிய வளவாளருமான வை.ஹபிப்புல்லா இலங்கை கணக்காளர் சேவை தரம் -01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் PSC/PRO/06/1028/2022 ம் இலக்க கடிதத்திற்கு அமைய 2020/04/21ம் திகதியில்  இருந்து கணக்காளர் சேவை தரம்-01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் அம்பாறை மாவட்ட செயலகம், நாவிதன்வெளி,கல்முனை பிரதேச செயலகங்களில் கணக்களராக கடமையாற்றியுள்ளார் என்பதோடு இலங்கை கணக்காளர் சேவையில் அகில இலங்கையில் முதலாம் நிலையில் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.