கர்பலா கிராமத்திலுள்ள விடுதியொன்று சோதனை

கர்பலா கிராமத்திலுள்ள விடுதியொன்று சோதனை

காத்தான்குடி, கர்பலா கிராமத்திலுள்ள விடுதியொன்று சி.ஐ.டி மற்றும் விசேட அதிரடிப் படை ஆகியோரினால் இன்று (08) வெள்ளிக்கிழமை சோதனைக்குட்படுத்தப்பட்டது.

சஹ்ரான் குழுவினரால் இந்த இடத்தில் பயிற்சி வழங்கப்பட்டதாக தற்போது கைதாகியுள்ள பெண்ணொருவர் வழங்கிய தகவலின் பிரகாரமே இந்த தேடுதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து வந்த விசேட குழுவினராலேயே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.