களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பத்து மணி நேர நீர் வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பத்து மணி நேர நீர் வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (12) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல்  பத்து மணி நேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய - வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலிமினாவத்த, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர், பெந்தோட்ட உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளமையினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.