'ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை'

'ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை'

லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே. லவநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.எம்.எல் பண்டாரநாயக்க விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"இந்த கைது தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு வாய் மொழி மூலம் அறிவித்துள்ளேன். இது தொடர்பில் இன்று எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளேன்" என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள நிலையில் பிரதேச செயலாளருக்கு எதிராக உள்ளக ரீதியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் மாவட்ட செயலாளர் கூறினார்.

இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு பதில் செயலாளரொருவர் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி:

லஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்