சுற்றுலா பயணிகளை பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரமே தங்கவைக்க நடவடிக்கை

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலா பயணிகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரமே தங்கவைக்க முடியுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதுவரை இவ்வாறான 5 ஆயிரம் ஹோட்டல்கள் மற்றும விடுதிகள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுமார் 20 இற்கு மேற்பட்ட பதிவு செய்யப்படாத ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால், ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் விரைவில் பதிவு செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.