15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 6 பேருக்கு விளக்கமறியல்

15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 6 பேருக்கு விளக்கமறியல்

செவனகல பிரதேசத்தில் 15 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆறு பேரை எதிர்வரும் மே 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர்களும் 17 – 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின் ஒருவர் குறித்த சிறுமியின் காதலர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.